நாம் தமிழர்

கோடி தமிழன் சாகட்டும் !
தன் குடியே கூட
கெட்டுப் போகட்டும் !
எவனோ யாரோ
எப்படியோ போகட்டும்
என்று வாழ்வோம் !

நமக்கு நம் வேலை
என்று வாழும்
எவனும் "தமிழன்" என்று
சொல்லிக்கொள்ளத்
தேவயில்லை ..!!

ஒன்றும் செய்யாதவன் தான்
தமிழன்
அதனால் தான் அடிமேல்
அடிவாங்கி கொண்டிருக்கிறான்
அங்கே.!

புலிகள் ஓநாய்களிடம்
வீழக்கூடுமோ ?
ஈழத்தில் நிகழ்கிறதே
நிமிடத்திர்க்கொருமுறை
இந்த கொடுமையும்!!

மத்திய அரசுக்கு
மதிகெட்ட அரசென்றால்
மாநில அரசு
மானங்கெட்ட அரசோ ??

உன் வீட்டு அடுப்பில்
உலை கொதிக்கிறது !
அங்கேயோ உயிரே
உலையாய் கொதிக்கிரதடா?

தன் வீடு ,தன் மக்கள்,
சோறு , சுகம்,
என்று வாழும் தமிழா!!

உன்னை அங்கு போய் போராட
ஒன்றும் சொல்லவில்லை  ..!!
விடு உனக்கு அந்த
தைரியமும் இல்லை!

ஒரு கேள்வி
ஒரு வருத்தம்
ஒரு கணம்
என்னவென்று கேட்டிருப்பாயோ
தமிழனின் நிலை ??

உயிர்வலியை உணரத்தெரியாத
உனக்கு
வீடெதற்கு ?
சோறெதற்கு?
உயிரெதற்கு?
உனக்கெல்லாம் எதற்கொரு
வாழ்க்கை ?   

ஒரே ஒரு கேள்வி கேள் !
உன் பின் ஒருத்தன்
அவன் பின்
இன்னொருத்தன் !
இன்னொருத்தன் பின்
வேறொருவனுமாய்!
இணைந்திடுவான் தமிழன் !

"இனி ஒரு உலகம் செய்வோம் "
"இனி ஒரு விதி செய்வோம் "

என்று வார்ர்தை வீரியம் எதற்கு ?

நூறு வார்த்தைகளுக்கு பதில்
ஒரு செயல் செய் போதும்!!
தூங்கிக்கொண்டிருக்கும்
 தமிழ் உணர்வுகளை
தட்டி எழுப்பும் விதை
நீயாய் இரு ..!!
உன் பின் நானிருக்கிறேன்..!!
உயிர் ஒன்று இருக்கிறது
தமிழுக்காய்..!!
ஒவ்வொரு சொட்டுமே
தமிழ்க்குருதி !!

எங்கே தமிழன் வீழ்கிறானோ
அங்கே தர்மம் வீழ்கிறது !!
எங்கே தமிழன் சாகிரானோ
அங்கே நியாயம் சாகிறது ..!!

" தமிழனென்று " சொல்லிக்கொள் !
கல்லும் மண்ணும்
தோன்றாத போதும்
சொல்லும் பொருளும்
இருந்ததே !!
அது உன் மொழி தான் !!
தமிழ்!!

தமிழனென்று சொல்!
தலை நிமிர்ந்த நில்!!
உரிமைகளை கேள்!
ஊருக்காய் வாழ் !

எர்னெஸ்டோ சே குவேரா

சே குவேராவின் பொன் மொழிகள் :

* நான் இறந்த பிறகு என் துப்பாக்கியை என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள் , அப்போதும் தோட்டாக்கள் சீறிப்பாயும் !!     
              
* மண்டியிட்டு வாழ்வதை விட , நின்று கொண்டே சாவது மேல் !

* என்னை சுட்டு வீழ்த்தத் துணிந்த கோழையே !, உலகில் மிக உன்னதமான பட்டம் ஒன்று இப்போது உனக்குரியதாகி விட்டது "உலகிலே முதன் முதலில் ஒரு மனிதனை சுடப்போகிறவன் நீதான் "

* உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” -சே


சேவின் உன்னத பதில் : 
க்யூபாவில் தான் உங்கள் புரட்சி வென்றுவிட்டதே. பிறகு ஏன் பொலிவியாவில் போராடுகிறீர்கள் என்ற கேள்விக்கு சே இப்படி பதிலளித்தார்,
 
"உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"