
தன் குடியே கூட
கெட்டுப் போகட்டும் !
எவனோ யாரோ
எப்படியோ போகட்டும்
என்று வாழ்வோம் !
நமக்கு நம் வேலை
என்று வாழும்
எவனும் "தமிழன்" என்று
சொல்லிக்கொள்ளத்
தேவயில்லை ..!!

தமிழன்
அதனால் தான் அடிமேல்
அடிவாங்கி கொண்டிருக்கிறான்
அங்கே.!
புலிகள் ஓநாய்களிடம்
வீழக்கூடுமோ ?
ஈழத்தில் நிகழ்கிறதே

இந்த கொடுமையும்!!
மத்திய அரசுக்கு
மதிகெட்ட அரசென்றால்
மாநில அரசு
மானங்கெட்ட அரசோ ??
உன் வீட்டு அடுப்பில்
உலை கொதிக்கிறது !
அங்கேயோ உயிரே
உலையாய் கொதிக்கிரதடா?

சோறு , சுகம்,
என்று வாழும் தமிழா!!
உன்னை அங்கு போய் போராட
ஒன்றும் சொல்லவில்லை ..!!
விடு உனக்கு அந்த
தைரியமும் இல்லை!
ஒரு கேள்வி
ஒரு வருத்தம்
ஒரு கணம்
என்னவென்று கேட்டிருப்பாயோ
தமிழனின் நிலை ??
உயிர்வலியை உணரத்தெரியாத
உனக்கு
வீடெதற்கு ?
சோறெதற்கு?
உயிரெதற்கு?
உனக்கெல்லாம் எதற்கொரு
வாழ்க்கை ?
ஒரே ஒரு கேள்வி கேள் !
உன் பின் ஒருத்தன்
அவன் பின்
இன்னொருத்தன் !
இன்னொருத்தன் பின்
வேறொருவனுமாய்!
இணைந்திடுவான் தமிழன் !
"இனி ஒரு உலகம் செய்வோம் "
"இனி ஒரு விதி செய்வோம் "
என்று வார்ர்தை வீரியம் எதற்கு ?

ஒரு செயல் செய் போதும்!!
தூங்கிக்கொண்டிருக்கும்
தமிழ் உணர்வுகளை
தட்டி எழுப்பும் விதை
நீயாய் இரு ..!!
உன் பின் நானிருக்கிறேன்..!!
உயிர் ஒன்று இருக்கிறது
தமிழுக்காய்..!!
ஒவ்வொரு சொட்டுமே
தமிழ்க்குருதி !!
எங்கே தமிழன் வீழ்கிறானோ
அங்கே தர்மம் வீழ்கிறது !!
எங்கே தமிழன் சாகிரானோ
அங்கே நியாயம் சாகிறது ..!!
" தமிழனென்று " சொல்லிக்கொள் !

தோன்றாத போதும்
சொல்லும் பொருளும்
இருந்ததே !!
அது உன் மொழி தான் !!
தமிழ்!!
தமிழனென்று சொல்!
தலை நிமிர்ந்த நில்!!
உரிமைகளை கேள்!
ஊருக்காய் வாழ் !
2 comments:
வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க
கவிதை பந்தலில் இளைப்பாறலாம்
மரணத்தை வென்ற மாவீரர்களை போற்றுவோம்!தமிழீழம் மலர, தமிழன் தலை நிமிர! நவம்பர் 27
Post a Comment