வார்த்தைகள் கிடைக்காத நொடிகள் :

நொடிகளில் தோன்றி மறையும்
நீர்க்குமிழி !

மழைவானத்தில் மஞ்சளும் சிவப்புமாய்
வானவில் !

விதைகளுக்கு வாழ்வளிக்காமல்
நுனிப்புல்லில் மேய்ந்திருக்கும்
மழைத்துளி !

விரும்பிய இதயங்களின் எதிர்பார்த்த
வார்த்தைகள் !

விரும்பாத இதயங்களின் எதிர்பாராத
அன்பு !

முதற் துளி கண்ணீரை பார்த்ததும்
மறுதுளி கண்ணீரை துடைத்தெறியும்
நட்பு !

உலகமே வெறுத்தாலும்
உன்னை விட்டுக்கொடுக்காத
அன்னை.!

தனக்கென நடக்கும் அத்தனையையும்
ரசிக்கிற மனிதனின்
மனங்கள் !!

வாழ்கையில் இந்தத்
தருணங்களை பெறுகையில்
வர்ணிக்க வார்த்தை இல்லாமல்
தினறிப்போகிறான்  
மனிதன் !

நானும் அப்படித்தான் !

0 comments:

Post a Comment