தலைவனாய் இரு



யாரும் விரும்பாத ஒரு செயலில்
உன் விருப்பங்கள் செல்வதாய்
இருந்தால் செய்.!
நியாயமென்று உன் மனம்
உன்னிடம் சொன்னால்
மட்டுமே செய்.!


ஒரு தடவை செய்.!
உலகம் எதிர்க்கும்.!
மறுமுறையும் செய்.!
மறுபடியும் எதிர்க்கும்.!


ஆயிரம் முறை செய்.!
அப்போதும் உலகம் எதிர்க்கும்.!


ஆயிரத்தி ஒன்றாவது முறை செய்!
உலகம் விசித்திரமானது.!
அதற்கு நல்லதும் கெட்டதும்
இன்னொருவர் சொல்லித்தான் தெரியும்.!


உன் பேச்சில் பிடிப்புடன் இரு.!


நீ நம்பினால் உலகம் மாறும்.!


பத்தாயிரம் எதிர்ப்புகளுடன்
அதற்கு மேல் ஒருமுறை
நீ பெறும் ஒரே ஒரு சிறிய ஆதரவும்.!
உன் சரித்திரத்தை திருத்தி எழுதும்.!
அப்போது உன் பெயர்
என்னவென்று மாறியிருக்கும் தெரியுமா?

" தலைவன்" 



0 comments:

Post a Comment